
IPL 2022: Punjab Kings won 5 wickets against RCB (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஆர்சிபியை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியிந் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள்(7சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் காட்டடி ஆட்டம் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.