Advertisement
Advertisement
Advertisement

கனமழையால் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்பட்ட ஆபாத்து!

கொல்கத்தாவில் தொடர்ந்து கன மழை பெய்வது வருவதால் ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement
IPL 2022 Qualifier 1: Rain, storm lashes Kolkata to damage Eden Press
IPL 2022 Qualifier 1: Rain, storm lashes Kolkata to damage Eden Press (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2022 • 01:35 PM

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றின் முதல் 2 போட்டிகள் நாளையும், நாளை மறுநாளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்தன. இந்த நிலையில், கொல்கத்தாவில் கன மழை பெய்து வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan
May 23, 2022 • 01:35 PM

இந்த வாரம் முழுவதும் மாலை நேரத்தில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறுகிறது. இதனால் ஐபிஎல் போட்டிகள் திட்டமிட்டப்படி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் கலக்கத்தில் உள்ள பிசிசிஐ இதுவரை மாற்று ஏற்பாட்டை செய்யவில்லை. போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றவும் தற்போது நேரமில்லை.

Trending

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பிசிசிஐ தவித்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களும் மழை பெய்ய கூடாது என்று வேண்டுதலில் ஈடுபடுகின்றனர். நாளை நடைபெறும் முதல் குவாலிஃபையரில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஒரு வேலை இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், புள்ளி பட்டியலில் எந்த அணி முன்னிலையில் உள்ளதோ, அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதே போன்று புதன்கிழமையும் மழையின் குறுக்கீடு இருக்கலாம். அப்போதும் ஆட்டம் தடைப்பட்டால் எந்த அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அப்படி பார்த்தால் குஜராத் அணிக்கும், லக்னோ அணிக்கும் தான் லக் உள்ளது.

முதல் குவாலிபையரில் தோற்றதுவிட்டது என்று ராஜஸ்தான் அணி அறிவிக்கப்பட்டாலும், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு குவாலிபையர் 2வில் கிடைக்கும். ஆனால் ஆர்சிபியின் நிலைமை தான் மிகவும் பாவம். தோற்றால் நடையை கட்ட வேண்டியது தான். இதனால் மழை குறுக்கீடு இருக்க கூடாது என்று ஆர்சிபி ரசிகர்கள் வேண்டுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement