
IPL 2022: RCB beat KKR by 3 wickets (Image Source: Google)
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
ஆர்சிபி அணி கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் தான் இந்த போட்டியிலும் ஆடியது. அந்த அணியின் ஆடும் லெவனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கேகேஆர் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவிக்கு பதிலாக டிம் சௌதி சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் வெங்கடேஷ் ஐயரை(10) ஆகாஷ் தீப்பும், அஜிங்க்யா ரஹானேவை (9) முகமது சிராஜும் வீழ்த்தினர். அதன்பின்னர் கேகேஆர் அணியின் மிடில் ஆர்டரை ஆர்சிபி ஸ்பின்னர் வனிந்து ஹசரங்கா சரித்தார்.