
IPL 2022: RCB bowlers restricted Rajasthan Royals by 144 runs (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து களமிறங்கி அடித்து விளையாடிய அஸ்வினும் 17 ரன்களில் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் நடப்பு சீசனில் 3 சதங்களை விளாசி அசுர ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.