
IPL 2022: RCB Will Be Watching MI vs DC Clash Closely, Says Maxwell After Win Against GT (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 62* ரன்களும், டேவிட் மில்லர் 34 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணிக்கு டூபிளசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் மிக சிறப்பான துவக்கம் கொடுத்தனர். கடந்த போட்டியில் மிக கடுமையாக சொதப்பிய விராட் கோலி, இந்த போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.