
இந்தியவில் கோலாகலமாக நடைபெற்று வந்த 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இருந்த 8 அணிகளுடன் 2 புதிய அணிகள் இணைப்பட்டு மொத்தம் 10 அணிகள் களமிறங்கின. இதில் அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாகவும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 2ஆவது அணியாகவும், 2 முறை சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது அணியாகவும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறின. தொடர்ந்து வாழ்வா? சாவா லீக் ஆட்டத்தில் தோல்வி கண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ், மற்றும் தகுதி புள்ளிகளை பெறாத பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் நடையை கட்டினார்.
பிளே ஆஃப் சுற்றின் முதலாவது தகுதிச் சுற்றில் பட்டியலில் முதல் மற்றும் 2ஆவது இடத்தில் இருந்த குஜராத் டைட்டன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய நிலையில், ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி தும்சம் செய்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.