
ஐபிஎல் தொடரின் 34ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய லலித் யாதவின் பொறுப்பான ஆட்டத்தின் மூலம், டெல்லி அணி தனது வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவரில் 36 ரன்கள் தேவை என்ற நிலை வரை வந்தது. போட்டியின் 19ஆவது ஓவரை வீசிய பிரசீத் கிருஷ்ணா அந்த ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல், லலித் யாதவின் (37) விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியதன் மூலம், டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஒரு ஓவரில் 36 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.