
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இம்மாதம் 26ஆம் தேதி முதல் மஹாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலையொட்டி ஐபிஎல் 2022 தொடருக்கான பயோ பபுள் விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகளை மீறும் வீரர்கள் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர குடும்ப உறுப்பினர்களுக்கும் கட்டுபாட்டுகளை அறிவித்துள்ள பிசிசிஐ, மீறும் வீரருக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அதேமாதிரியான சிக்கல் மீண்டும் எழாத வகையில், இந்த ஆண்டு ஐபிஎல் பயோ பபிள் விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் அணி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும்.