
கடந்த மார் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
நடப்பு தொடரே இன்னும் முடிவடையாத சூழலில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரபரப்பு உரிமையை விற்பதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான அடிப்படை தொகையை பிசிசிஐ நிர்ணயம் செய்யவுள்ளது.
இந்நிலையில் அதற்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் யாரும் பெரியளவில் பார்க்கவில்லை எனத்தெரியவந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான "பார்க்" ரேட்டிங்கில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. முதல் மூன்று இடங்களில் சன் டிவி, ஸ்டார் மா, ஸ்டார் ப்ளஸ் ஆகியவை உள்ளன.