Advertisement

எங்கள் தவறுகளை திருத்தி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம் - ரிஷப் பந்த்!

ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை எப்போதும் வழங்க நினைக்கிறன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 01, 2024 • 12:50 PM
எங்கள் தவறுகளை திருத்தி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம் - ரிஷப் பந்த்!
எங்கள் தவறுகளை திருத்தி இப்போட்டியில் வெற்றிபெற்றுள்ளோம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில்  பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி டேவிட் வார்னர், ரிஷப் பந்த் ஆகியோரது அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 191 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே தரப்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய அஜிங்கியா ரஹானா 45 ரன்களையும், டேரில் மிட்செல் 34 ரன்களை சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, இறுதியில் மகேந்திர சிங் தோனி 4 பவுண்டரி,  3 சிக்சர்களை விளாசி 37 ரன்களைச் சேர்த்தார். 

Trending


இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. 

இந்நிலையில், இப்போட்டியின் வெற்றிகுறித்து பேசிய ரிஷப் பந்த், “இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். கடந்த போட்டிகளில் செய்த தவறுகளில் இருந்து எங்களை திருத்திக்கொண்டு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளோம். கடந்த 2 வாரங்களாகவே ப்ரித்வி ஷா பேட்டிங்கில் தனது பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இதுதான் அவருக்கான நேரம் என்று இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பளித்தோம்.

அவரும் தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்தி கொண்டார். அதேபோல் முகேஷ் குமாரும் மிகச்சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஒரு கிரிக்கெட்டராக நான் என்னுடைய 100 சதவீத பங்களிப்பை எப்போதும் வழங்க நினைக்கிறன். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நான் பெரியளவில் போட்டிகளில் விளையாடவில்லை. இது நான் என் வாழ்க்கையை நம்பியிருக்கும் விஷயம். எது நடந்தாலும், மீண்டும் களத்திற்கு வருவது முக்கியம் என்ற தன்னம்பிக்கை எப்போதும் இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.

 

 

 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement