Advertisement

பைல்ஸை மட்டும் தட்டிய தூக்கிய வைபவ் அரோரா; ஷாக் ஆகி நின்ற ஷாய் ஹோப் - காணொளி!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் வைபவ் அரோரா தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் ஷாய் ஹோப் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 29, 2024 • 22:25 PM
பைல்ஸை மட்டும் தட்டிய தூக்கிய வைபவ் அரோரா; ஷாக் ஆகி நின்ற ஷாய் ஹோப் - காணொளி!
பைல்ஸை மட்டும் தட்டிய தூக்கிய வைபவ் அரோரா; ஷாக் ஆகி நின்ற ஷாய் ஹோப் - காணொளி! (Image Source: Google)
Advertisement

கொல்கத்தா நைட் ரைட்ர்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெற்றது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. 

அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 13 ரன்களுக்கும், அதிரடி வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஷாய் ஹோப், அபிஷேக் போரால் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். பின்னர் அணியை கரைசேர்க்க வேண்டிய பொறுப்பில் இருந்த கேப்டன் ரிஷப் பந்தும் 27 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

Trending


மேலும் நட்சத்திர வீரர்கள் அக்ஸர் படேல் 15 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4 ரன்களுக்கும் விக்கெட்டை இழக்க, இம்பேக் வீரராக களமிறங்கிய குஷாக்ராவும் ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையை கட்டினார். அதன்பின் களமிறங்கிய குல்தீப் யாதவ் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு 5 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

குல்தீப் யாதவின் அபாரமான ஆட்டத்தின் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைக் குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ரானா மற்றும் வைபவ் அரோரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 154 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. 

 

இந்நிலையில் இப்போட்டியில் ஷாய் ஹோப்பின் விக்கெட்டை தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் வைபவ் அரோரா கைப்பற்றிய காணொளி வைரலாகியுள்ளது. அதன்படி இன்னிங்ஸின் 4ஆவது ஓவரை வைபப் அரோரா வீச, அதனை ஷாய் ஹோப் எதிர்கொண்டார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஷாய் ஹோப் தவறவிடவே, அது நேரடியாக ஆஃப் ஸ்டம்பிலிருந்த பைல்ஸை மட்டுமே தட்டியது. 

இதன்மூலம் ஷாய் ஹோப் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இப்போட்டியில் வைபவ் அரோராவின் இந்த பந்துவீச்சு குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இலக்கை துரத்தி வரும் கேகேஆர் அணியானது முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 79 ரன்களை குவித்துள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement