Advertisement
Advertisement

நாங்கள் கோப்பையை நிச்சயம் வெல்வோம் - புவனேஷ்வர் குமார் நம்பிக்கை!

கடந்த மூன்று சீசன்களில் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுகளில் விளையாடாமல் தற்போது மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கிறது என சன்ரைசர்ஸ் அணி வீரர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan May 25, 2024 • 15:17 PM
 நாங்கள் கோப்பையை நிச்சயம் வெல்வோம் - புவனேஷ்வர் குமார் நம்பிக்கை!
நாங்கள் கோப்பையை நிச்சயம் வெல்வோம் - புவனேஷ்வர் குமார் நம்பிக்கை! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனானது தற்சமயம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் முன்னேறியுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப்போட்டியானது நாளை சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

முன்னதாக நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள ஹைதராபாத் அணிக்கு நிச்சயம் கோப்பையை கைப்பற்றும் என அந்த வீரர் புவனேஷ்வர் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

Trending


இதுகுறித்து பேசிய அவர், “கடந்த மூன்று சீசன்களில் நாங்கள் பிளே ஆஃப் சுற்றுகளில் விளையாடாமல் தற்போது மீண்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்கிறது. அது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒன்று. இந்த சீசனில் நாங்கள் விளையாடிய விதத்தில், நாங்கள் இறுதிப் போட்டிக்கு வருவோம் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. நாங்கள் நினைத்தைப் போலவே தற்போது இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளோம். 

இத்தொடரில் அனைவரின் பங்களிப்பையும் கண்டு அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர், இது அருமையான குழுப்பணி. ஐபிஎல் பட்டத்தை வெல்வது உண்மையிலேயே சிறப்பானது, இப்போது இறுதிப்போட்டிக்கு வந்துவிட்டதால், நாங்கள் கோப்பையை நிச்சயம் வெல்வோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement