
முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஐபிஎல் தொடர் வரலாற்றில் 4ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதித்துள்ளது. அதேசமயம் இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவி இருந்தாலும், இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. மேலும் இப்போட்டியில் ஆர்சிபி அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய சுயாஷ் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ரஜத் படிதார், “எங்கள் திட்டங்கள், எப்படி பந்து வீச வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம் என்று நினைக்கிறேன். வேகப்பந்து வீச்சாளர்கள் மேற்பரப்பை நன்றாகப் பயன்படுத்தினார்கள் என்று நினைக்கிறேன். சுயாஷ் சிறப்பாக செயல்பட்ட விதம், அவர் தனது லைன்ஸ் அண்ட் லெந்த்களை வீசிய விதம், அது மிகவும் நன்றாக இருந்தது. ஒரு கேப்டனாக அவரது பந்துவீச்சைப் பற்றி நான் தெளிவாக இருக்கிறேன்.