
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் கடந்த மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொட்ங்கியது. ஒருபக்கம் ஐபிஎல் தொடரானது மீண்டும் தொடங்கினாலும் இதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது பெரும் சிக்கலாம மாறிவுள்ளது.
ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுதவிர்த்து இங்கிலாந்து அணியும் இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகிவுள்ளது. அந்தவகையில் தற்போது ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.