சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட ஐபிஎல் வீரர்கள் - காணொளி!
இமாச்சல பிரதேசத்தில் இருந்த ஐபிஎல் அணி வீரர்கள் துணை ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு ரயில் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.

தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதேசமயம் மைதானத்தில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், இந்திய எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டதாகவும், அதனால் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மைதானத்தில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிசிசிஐ தரப்பில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மட்டுமே ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தது.
மேற்கொண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் எஞ்சியுள்ள போட்டிகள் அனைத்தும் ஒரு வார காலம் ஒத்திவைக்கப்படுவதாகவும், எஞ்சியுள்ள போட்டிகளுக்கான இடம் மற்றும் தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேற்கொண்டு இமாச்சல பிரதேசத்தில் அனைத்து விமான நிலையங்களும் பாதுகாப்பு காரணமாக பொது போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் தர்மசாலாவில் இருக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளின் வீரர்கள், துணை ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினரை பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்ல ஒரு சிறப்பு ரயிலை ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
Thank you, @RailMinIndia, for arranging a special Vande Bharat train on such short notice to ferry the players, support staff, commentators, production crew members, and operations staff to New Delhi.
We deeply appreciate your swift response@AshwiniVaishnaw | @JayShah |… pic.twitter.com/tUwzc5nGWD— IndianPremierLeague (@IPL) May 9, 2025Also Read: LIVE Cricket Score
அதன்படி இன்றைய தினம் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் துணை ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் அனைவரும் பிசிசிஐ தரப்பில் சிறப்ப ரயில் மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இதுகுறித்த காணொளியையை ஐபிஎல் நிர்வாகம் தங்களுடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகியும் வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now