Advertisement

பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா!

நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் புத்திசாலித்தனமாகவும் துல்லியமாகவும் இருந்தது என மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Advertisement
பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா!
பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீசினர் - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Apr 18, 2025 • 02:19 PM

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
April 18, 2025 • 02:19 PM

அதன்படி, களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 40 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 37 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அனிகெத்வர்மா 18 ரன்களையும் சேர்த்தான்ர். மும்பை இந்தியன்ஸ் தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வில் ஜேக்ஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Also Read

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் ரஹித் சர்மா 26 ரன்களையும், ரியான் ரிக்கல்டன் 31 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களையும், வில் ஜேக்ஸ் 36 ரன்களையும், கேப்டன் ஹர்திக் பாண்டியா 21 ரன்களையும் சேர்த்து ஆட்டமிழந்தாலும் மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, “நாங்கள் பந்து வீசிய விதம் மிகவும் புத்திசாலித்தனமாகவும் துல்லியமாகவும் இருந்தது. நாங்கள் எளிமையாகவும், அடிப்படைத் திட்டங்களில் உறுதியாக இருந்தோம். சில பந்துகளை அடிப்பது எளிதாக இல்லை. பந்து வீச்சாளர்களுக்கு நன்றி, நாங்கள் அவர்களை சில நல்ல ஷாட்களை அடிக்க வைத்தோம். அதன்மூலம் நாங்கள் அவர்களை கொஞ்சம் அழுத்தத்தில் வைத்திருந்தோம்.

Also Read: Funding To Save Test Cricket

வில் ஜாக்ஸ் மிகச்சிறந்த ஃபீல்டர்களில் ஒருவர்.  மேலும் அவரால் சிறப்பான பந்துவீச்சையும் வெளிப்படுத்த முடியும். இன்று அது எங்களுக்கு பலனளித்தது. 42 பந்துகளில் 42 ரன்கள் தேவைப்பட்டபோது, ​​அது ஒரு  பகுதி என்று நாங்கள் உணர்ந்தோம், எனவே நாங்கள் அதிரடியாக விளையாடுவதற்கு பதிலாக, இரண்டு ஓவர்கள் நேரம் எடுத்துக்கொண்டோம். ஏனெனில் பவுண்டரிகள் வந்தவுடன், அழுத்தம் குறைந்துவிடும், எனவே நாங்கள் இறுதியில் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தோம்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement