
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 76 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 75 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 65 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு 34 ரன்களையும், அறிமுக வீரர் விப்ராஜ் நிகாம் 39 ரன்களையும் சேர்க்க, இறுத்தியில் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.