Advertisement

அணியாக தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் - ரிஷப் பந்த்!

ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எடுக்க விரும்புகிறோம், ஒரு அணியாக அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் என லக்னோ அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement
அணியாக தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் - ரிஷப் பந்த்!
அணியாக தோல்வியில் இருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 25, 2025 • 10:47 AM

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், தங்களுடைய சீசனையும் வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 25, 2025 • 10:47 AM

அதன்படி இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மார்ஷ் 76 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 75 ரன்களையும் சேர்த்த நிலையில் மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Trending

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தது. இதனால் அந்த அணி 65 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தனது பங்கிற்கு 34 ரன்களையும், அறிமுக வீரர் விப்ராஜ் நிகாம் 39 ரன்களையும் சேர்க்க, இறுத்தியில் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஷுதோஷ் சர்மா அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன், 5 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என 66 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.

இந்நிலையில் இந்த போட்டி தோல்வி குறித்து பேசிய ரிஷப் பந்த், “எங்கள் டாப்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள், இந்த விக்கெட்டில் இது ஒரு நல்ல ஸ்கோர் என்று நான் நினைக்கிறேன். ஒரு அணியாக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நாங்கள் நேர்மறையான விஷயங்களை எடுக்க விரும்புகிறோம், ஒரு அணியாக அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம். நாங்கள் எவ்வளவு அடிப்படைகளை சரியாகச் செய்கிறோமோ, அவ்வளவுக்கு எதிர்காலத்தில் அது எங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

பந்துவீச்சின் போதும் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை எடுத்தோம், ஆனால் அது பேட்டிங் செய்ய ஒரு நல்ல விக்கெட் என்று எங்களுக்குத் தெரியும். நாங்கள் அடிக்கடி அடிப்படைகளை சரியாகச் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்களை வைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன். ஒன்று டிரிஸ்டன் ஸ்டப்ஸ் - அஷுதோஷ் சர்மா இடையேயும், மற்றொன்று விப்ராஜ் நிகாம் மற்றும் அஷுதோஷ் சர்மா இடையே இருந்தது.

Also Read: Funding To Save Test Cricket

இந்த போட்டியில் விப்ராஜ் நிகம் ஒரு அற்புதமான வேலையை செய்தார். அவரது அந்த அட்டத்தின் காரணமாக இப்போட்டி எங்களிடமிருந்து பறிபோனது. நாங்கள் அழுத்தத்தை உணர்ந்தோம், நாங்கள் இன்னும் நிலைத்து நிற்கிறோம், ஆனால் இந்த போட்டியில் இருந்து எடுக்க நிறைய நேர்மறையான விஷயங்களை. இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டம் நிச்சயம் ஒரு பங்கு வகிக்கிறது. நீங்கள் இவற்றில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக சிறந்த கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement