
ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து 10 அணிகளிலும் உள்ள வெறும் 77 இடங்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் போட்டி போட்டதால் அதிக தொகைக்கு விலை போகப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.
அந்த சூழ்நிலையில் துவங்கிய ஏலத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கி வெற்றியை பறித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்கு சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் ஹைதராபாத் நிர்வாகம் விட்டுக் கொடுக்காமல் 6.80 கோடிக்கு போட்டி போட்டு அவரை வாங்கியது.
அந்த நிலைமையில் 2ஆவது செட்டில் வந்த வீரர்களில் நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை வாங்குவதற்கு சில அணிகள் போட்டியிட்டது. ஆனால் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 1.80 என்ற குறைந்த விலையிலேயே வளைத்து போட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 8 இன்னிங்ஸில் 523 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.