
IPL gets off to its worst start; lowest TRP in 5 years (Image Source: Google)
நடப்பு சீசன் கடந்த மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு பிறகு 10 அணிகள் இந்த தொடரில் பங்கேற்றன. இந்த சீசனை வழக்கம் போல் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பியது.
இந்த சீசனில் விளம்பரங்கள் மூலம் மட்டும் 5 ஆயிரம் கோடியை ஸ்டார் நிறுவனம் வசூல் செய்தது. இதனால் அடுத்த 5 ஆண்டுக்கான தொலைக்காட்சி ஒப்பந்தம் பெரும் அளவில் ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங்கை கண்காணிக்கும் பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள முடிவில், மார்ச் 26ஆம் தோதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை ரேட்டிங் 2.75 என்ற அளவில் தான் பதிவாகியுள்ளது. இதுவே கடந்த சீசனின் முதல் வாரத்தில் இது 3.75 என்ற அளவில் பதிவாகியுள்ளது. இதன் மூலம் 33 சதவீதம் அளவுக்கு ரேட்டிங் குறைந்துள்ளது.