
IPL Mega Auction 2022 - All Rounders Set 2 Players Sold (Image Source: Google)
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களின் ஏலம் நடைபெற்றது. இதன்பிறகு, சர்வதேச ஆட்டங்களில் விளையாடாத இளம் வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றது.
இந்நிலையில் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்று இரண்டாம் கட்ட வீரர்களுக்கான ஏலம் நடைபெற்றுவருகிறது. இதில் ஆல்ரவுண்டர்களுக்கான ஏலாம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன் 11.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அதேபோல் வெஸ்ட் இண்டீஸின் ஓடியன் ஸ்மித்தை ஹைதராபாத்துடன் போட்டியிட்டு பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.