
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு சமீபத்தில் அறிவித்தது.அ அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20ஆம் தேதி முதலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் பயிற்சியாளர் குழுவில் வழு சேர்க்கும் விதமாக, முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது.