
Ireland level series as Taylor signs off from international cricket (Image Source: Google)
அயர்லாந்து - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 34 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக கிரேக் எர்வின் 57 ரன்களை எடுத்தார்.
அதன்பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங் -ஆண்டி பால்பிர்னி இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.