
It doesn't matter who the opponent is - Jagadeesan! (Image Source: Google)
இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
அந்த வகையில் இன்றைய லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - அருணாச்சலபிரதேச அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்கள் ஜெகதீசன் , சாய் சுதர்ஷன் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
சாய் சுதர்ஷன் 154 ரன்கள் குவித்தார். அதேவேளை மற்றொரு புறம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெகதீசன் 141 பந்துகளில் 277 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார். முதல் தர வரிசை கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை ஜெகதீசன் படைத்தார். இறுதியில் தமிழ்நாடு அணி 50 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 506 ரன்கள் குவித்தது.