
நியூசிலாந்து அணி தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணிவெற்றி பெற்றும் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்ற நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றட்து .
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். மேலும் மழை காரணமாக போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன், மிட்செல் ஹெய் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் நியூசிலாந்து அணி 45.1 ஓவரில் 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து அணி தரப்பில் அதிகபட்மாக மார்க் சாப்மேன் 76 ரன்களும், மிட்ச் ஹே 49 ரன்களும் எடுத்தனர். இலங்கை சார்பில் ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் தலா 3 விக்கெட்டும், அசிதா 2பெர்னாண்டோ 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியும் தொடக்கத்திலேயே டாப் ஆர்டர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.