Advertisement
Advertisement
Advertisement

இது எங்களுக்கு முக்கியமான வெற்றி - சரித் அசலங்கா!

வெல்லாலகே ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதனால் இது அவருக்கு அறிமுக போட்டி போல் தெரியவில்லை என இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளார்.

Advertisement
இது எங்களுக்கு முக்கியமான வெற்றி - சரித் அசலங்கா!
இது எங்களுக்கு முக்கியமான வெற்றி - சரித் அசலங்கா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 16, 2024 • 11:28 AM

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்துவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 16, 2024 • 11:28 AM

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளாவில் நந்து முடிந்தது நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பதும் நிசங்கா 54 ரன்களைச் சேர்த்து ஆச்த்தினார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Trending

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது தொடக்கம் முதலே இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் ரோவ்மன் பாவெல், அல்ஸாரி ஜோசப் மற்றும் ரூதர்ஃபோர்ட் ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 16.1 ஓவரில் 89 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, சரித் அசலங்கா, வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன் 1-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் அரைசதம் கடந்த் பதும் நிஷங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Also Read: Funding To Save Test Cricket

இப்போட்டியில் வெற்றி பெற்றது குறித்து பேசிய இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா, “இது எங்களுக்கு முக்கியமான வெற்றி. எங்களின் பயணத்தில் இந்த வெற்றி ஒரு தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். டாஸ் வென்றது நன்றாக இருந்தது. 160-170 என்பது வெற்றி இல்க்காக இருக்கும் என்று நினைத்தோம். அதற்கேற்றவாறு தொடக்க ஆட்டக்காரர்கள் அடித்தளத்தை அமைத்தனர். மேலும் வெல்லாலகே ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அதனால் இது அவருக்கு அறிமுக போட்டி போல் தெரியவில்லை. அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு தொடரை வெல்வோம்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement