
வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளை உள்ளடக்கிய கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 19ஆம் தேதி தொடங்குகிறது. இதனையடுத்து இப்போட்டிக்கான இந்திய அணி சமீபத்தில் சென்னை வந்தடைந்தது.
அதன்பின் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா என நட்சத்திர வீரர்கள் தீவிர் பயிறியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்கதேசம் அணியினர் நேற்று சென்னை வந்து சேர்ந்தனர். இதனைத்தொடர்ந்து இன்று முதல் அவர்களும் பயிற்சியை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து வங்கதேச அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ சில கருத்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “இந்தியாவுடனான இந்த டெஸ்ட் தொடா் எங்களுக்கு மிகவும் சவாலாக இருக்கும். பாகிஸ்தானுக்கு எதிராக பெற்ற தொடா் வெற்றி அணி வீரா்களுக்கு கூடுதல் நம்பிக்கையை தந்துள்ளது. சிறப்பாக விளையாடினால் எங்களாலும் நல்ல முடிவுகளை பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.