
தற்பொழுது உலகக் கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடராக, ஆசிய அணிகள் பங்கு பெறும் பதினாறாவது ஆசியக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் உலகக் கோப்பைக்கு விளையாட தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன.
இதற்கு அடுத்து இந்தியாவில் 13ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. இந்த முறை உலக கோப்பையை இந்தியா மற்ற ஆசிய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளாமல், தனியாக இந்தியாவில் வைத்து நடத்துகிறது. இந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகளில் ஆசிய கண்டத்தின் ஐந்து அணிகள் போக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நெதர்லாந்து ஆகிய ஐந்து அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன.
அக்டோபர் மாதம் 5ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இத்தொடரின் முதல் போட்டி இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கிறது. இறுதிப் போட்டி நவம்பர் 19ஆம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரை வெல்ல அதிகபட்ச வாய்ப்பு இருக்கும் அணி எது என்று, தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் ஃபாஃப் டு பிளிசிஸ் தனது கணிப்பை கூறியிருக்கிறார்.