
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணியின் கேப்டன் டெம்பா பவுமா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 76 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 36 ரன்களும், கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர்.
இதன்பின் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான பவுமா 10 ரன்களிலும், டி காக் 22 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர். இதன்பின் களமிறக்கப்பட்ட டூவைன் ப்ரெடோரியஸ் 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து கொடுத்தார்.