Advertisement

பேட்டிங் சரியா இருந்த மட்டும் போதாது, ஃபினீஷ் செய்ய கத்துகணும் - சூர்யாவுக்கு கம்பீர் அட்வைஸ்!

சூர்யகுமார் யாதவ் சிறப்பாக பேட்டிங் செய்தாலும், போட்டியை முடிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan November 19, 2021 • 17:02 PM
'It's Not About How You Start, It's About How You Finish': Gautam Gambhir's Advice to Suryakumar Yad
'It's Not About How You Start, It's About How You Finish': Gautam Gambhir's Advice to Suryakumar Yad (Image Source: Google)
Advertisement

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஜெய்ப்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 165 ரன்களை இந்திய அணி சேஸிங் செய்தபோது 15வது ஓவரின் முடிவு இந்திய அணி சிறப்பாக விளையாடியது.

அதன்பின்னர் எளிதாக ஜெயித்திருக்க வேண்டிய போட்டியை அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இந்திய அணி இழுந்ததால் இறுதி நேரத்தில் போட்டி சற்று போராடி கடைசி ஓவரின் 4வது பந்தில் முடித்தது. நியூசிலாந்து நிர்ணயித்த 165 ரன்களை இந்திய அணி 19.4 ஓவர்களில் அடித்தாலும் இறுதி நேரத்தில் சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் என மூவரும் இறுதி நேரத்தில் ஆட்டமிழக்க சற்று இக்கட்டான வேளையில் ரிஷப் பண்ட் பவுண்டரி அடித்து போட்டியை முடித்துக் கொடுத்தார்.

Trending


இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் இளம் வீரரான சூர்யகுமார் யாதவ்-க்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இதுபோன்ற போட்டிகளில சேசிங் செய்யும்போது சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். மேலும் அடுத்த ஆண்டே மற்றொரு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க இருப்பதனால் நிச்சயம் இது போன்ற சேசிங்கில் எந்தவித இரக்கமின்றி எதிரணியை அடித்து நொறுக்க வேண்டும்.

ஏனெனில் கடந்த போட்டியில் இந்திய அணி முன்கூட்டியே ஆட்டத்தை முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதி நேரத்தில் 3 விக்கெட்டுகளை இழந்து கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இது தேவையில்லாத ஒன்று ஏனெனில் இதுபோட்டிகளில் நாம் ஆட்டத்தினை முன்கூட்டியே முடிக்க பழகவேண்டும். மேலும் நல்ல துவக்கம் கிடைக்கும்போது போட்டியை முன்கூட்டியே எந்தவித இரக்கமும் இன்றி அடித்து நொறுக்க வேண்டும்.

Also Read: T20 World Cup 2021

சூர்யகுமார் யாதவ் சிறப்பாக விளையாடி வருகிறார். இருப்பினும் போட்டியை வெற்றிகரமாக முடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த போட்டியில் அவர் 60 70 ரன்கள் அடித்து இருந்தாலும் கடைசியில் ரிஷப் பண்ட் அடித்த நான்கு ரன்கள் தான் போட்டியை பினிஷ் செய்தது. எனவே சூரியகுமார் இனி வரும் போட்டிகளில் பெரிய ரன்கள் குவிப்பது மட்டுமின்றி போட்டியை பினிஷிங் செய்வது எவ்வாறு என்பதனையும் அவர் கற்றுக்கொண்டு சிறப்பாக பினிஷிங் செய்து கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement