
இந்தியாவில் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகின் பல்வேறு நாடுகளும் டி20 பிரீமியர் லீக் தொடர்களை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியமும் கடந்தாண்டு முதல் எஸ்ஏ20 என்றழைக்கப்படும் டி20 தொடரை நடத்தில் வருகிறது. தற்போதுவரை இரண்டு சீசன்களை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. மேற்கொண்டு நடைபெற்று முடிந்த இரண்டு எஸ்ஏ20 லீக் தொடரிலும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்த தொடருக்கான பணிகளை எஸ்ஏ20 தொடரில் பங்கேற்கும் அணிகள் தற்போதில் இருந்தே தொடங்கியுள்ளன. அந்தவகையில் அடுத்த ஆண்டு ஜனவரி 09ஆம் தேதி முதல் எஸ்ஏ20 லீக் தொடரின் மூன்றாவது சீசன் தொடர் தொடக்கவுள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் ஏலமும் டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அணிகள் ஏலத்திற்கு முன்னரே வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றன.
அதன்படி நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன், இங்கிலாந்தின் ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், வெஸ்ட் இண்டீஸின் பிராண்டன் கிங் ஆகியோருடன் இன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கையும் எதிர்வரவுள்ள எஸ்ஏ20 லீக் தொடருக்காக அணிகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் அந்த அணியில் இருந்து விலகியுள்ளார்.