Advertisement

நாம் கற்றுக்கொண்டத்தை வைத்து மீண்டும் வலுவாக வர வேண்டும் - தோனி!

கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி அளித்த பேட்டி கவனிக்க வைத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 27, 2021 • 11:42 AM
KKR Deserves An Upper Hand To Make A Game Out Of Batting Friendly Pitch: MS Dhoni
KKR Deserves An Upper Hand To Make A Game Out Of Batting Friendly Pitch: MS Dhoni (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 38ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. அதன்பின் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி இன்னிங்ஸின் கடைசிப்பந்தில் இலக்கை எட்டி, 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.

Trending


இந்த போட்டி குறித்து பேசிய தோனி, "இது ஒரு நல்ல வெற்றி. சில நேரங்களில் நீங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவீர்கள், நீங்கள் தோற்பீர்கள். அதேசமயம், நீங்கள் நன்றாக விளையாடபோது வெற்றிப் பெறுகிறீர்கள் என்றால், அதனை மகிழ்ச்சியுடன் அனுபவித்துவிட வேண்டும். இரு தரப்பிலிருந்தும் நல்ல கிரிக்கெட் விளையாடப்பட்டது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாங்கள் நன்றாக பந்து வீசினோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது எளிதானது அல்ல. 170 என்பது ஒரு நல்ல ஸ்கோர் என்று நான் நினைத்தேன். முக்கியமான விஷயம் என்னவென்றால், நாம் கற்றுக்கொண்டவற்றைப் பயன்படுத்திக் கொண்டு மீண்டும் வலுவாக வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement