Advertisement

கரோனா அச்சுறுத்தல்: கூச் பெஹர் கோப்பை நாக் அவுட் போட்டிகள் ஒத்திவைப்பு!

கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கூச் பெஹர் கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகளை ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 10, 2022 • 16:34 PM
Knockout stage of Cooch Behar Trophy postponed due to surge in COVID-19 cases
Knockout stage of Cooch Behar Trophy postponed due to surge in COVID-19 cases (Image Source: Google)
Advertisement

நாடுமுழுவதும் மீண்டும் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் 19 வயதிற்குட்பட்டோருக்கான கூச்பெஹர் கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் நாடுமுழுவதும் நடைபெற்று வந்தது.

Trending


இதையடுத்து இத்தொடரின் நாக் அவுட் போட்டிகள் நாளை முதல் புனேவில் நடைபெறுதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தொடரின் நாக் அவுட் போட்டிகளை ஒத்திவைப்பதாக பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

அதேசமயம் ஒத்திவைக்கப்பட்டுள்ள போட்டிகளுக்கான மாற்று தேதியையும் பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ரஞ்சி கோப்பை, சிகே நாயுடு கோப்பை, சீனியர் மகளிர் ஒருநாள் கோப்பை ஆகிய தொடர்களை தேதி குறிப்பிடாமல் பிசிசிஐ ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement