
Krunal Pandya returns home after recovering from COVID-19 in Sri Lanka (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இதற்கு முக்கிய காரணம் குர்னால் பாண்டியாதான். ஏனெனில் இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக குர்னார் பாண்டியாவிற்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டது மட்டுமல்லாம், அவருடன் சேர்த்த நட்சத்திர வீரர்கள் 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்களுடன் மட்டுமே மீதமிருந்த இரண்டு டி20 போட்டியிலும் விளையாடியது.