
Kuldeep Yadav Admits Missing MS Dhoni's Guidance While Bowling (Image Source: Google)
ஒரு சமயத்தில் இந்திய அணியில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக வலம் வந்தவர் குல்தீப் யாதவ். ஆனால் அவர் தற்போது ஒரு போட்டியிலாவது விளையாட மாட்டோமா என்ற ஏக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானிடம் இந்தியா படுதோல்வி அடைந்த பிறகு, 'அணிக்கு இனி ரிஸ்ட் (மணிக்கட்டு) ஸ்பின்னர்கள் தான் தேவை' என்று கோச் ரவி சாஸ்திரி சொல்ல, மெல்ல மெல்ல அஷ்வினும், ஜடேஜாவும் ஓரங்கட்டப்பட, அணிக்குள் யுவேந்திர சாஹலும், குல்தீப் யாதவ்வும் ஆளுமை செலுத்தத் தொடங்கினர்.
சாஸ்திரி சொன்னது சரி தான் போல.. என்று அனைவரும் நினைக்கும் அளவுக்கு, இருவரும் மாஸ் காட்ட 'ஸ்பின் ட்வின்ஸ்' என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் கனவு தற்போது கனவாகவே மாறியுள்ளது.