
மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல்டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதில் டெல்லி அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாகப் பந்துவீசி 18 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் பொலார்ட், ரோஹித் சர்மா ஆகிய இரு முக்கிய விக்கெட்டுகளையும்குல்தீப் எடுத்துக்கொடுத்தார்.
ஆனால், கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற குல்தீப் யாதவுக்கு ஒரு போட்டியில் கூட அணி நிர்வாகமும், கேப்டன் மோர்கனும்வாய்ப்பு வழங்கவி்ல்லை. குல்தீப் யாதவின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் அவரை பெஞ்சிலேயே அமரவைத்து போட்டியை வேடிக்கை பார்க்க வைத்தனர்.
முதல் போட்டியிலியே டெல்லி கேபிடல்ஸ் அணி குல்தீப் யாதவின் திறமையை உணர்ந்து அவருக்கு வாய்ப்புஅளித்தது.அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தி நிரூபித்துள்ளார்.