
Lanka coach Arthur and captain Shanaka involved in heated dialogue after loss (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்புவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை அணி தீபக் சஹாரின் அபாரமான ஆட்டத்தினால் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், நேற்றைய போட்டியின் கடைசி சில ஓவர்களில் இலங்கை அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், கோபத்தின் உச்சிக்கே சென்று சில வார்த்தைகளை உதிர்த்துள்ளார். இது நேரலை வாயிலாக ரசிகர்கள் பலரும் கண்டனர்.
மேலும் போட்டி முடிவுக்கு பின்னர் மிக்கி ஆர்த்தர் மற்றும் கேப்டன் தசுன் ஷானகா இருவரும் மைதானத்திலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் வெளியாகின.