
ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் இலங்கை அணிக்குப் பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்காக இலங்கை அணிக்கு பந்துவீச்சுப் பயிற்சியாளராக மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் டி20 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளராக ரசித் மலிங்கா நியமிக்கப்பட்டிருந்தார். இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2ஆவது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, இலங்கை அணி மலிங்காவை திரும்ப அழைத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியி்ட்ட அறிவிப்பில் “ இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர், டி20, ஒருநாள் அணியின் முன்னாள் கேப்டன் ரசித் மலிங்காவை ஆஸ்திரேலியத் தொடருக்கான இலங்கை அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.