
‘Let’s promote optimism’ – Ravi Ashwin silences Yash Dhull’s critic after his classy knock in U19 W (Image Source: Google)
அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிச் சுற்றுக்கு 8ஆஅவது முறையாக இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. போட்டி நடைபெற்ற மைதானத்தில் எந்த அணியும் இந்த தொடரில் 200 ரன்களை எட்டியது இல்லை.
ஆனால் இந்திய அணி 290 ரன்களை எட்டி மற்ற அணிகளை மெர்சல் ஆக்கியது. குறிப்பாக கரோனா பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட இந்திய வீரர்கள் தடையை மீறி சாதனை படைத்துள்ளனர்.
குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் மற்றும் துணை கேப்டன் ரஷித், சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 204 ரன்களை சேர்த்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டது. சிறப்பாக விளையாடிய யாஷ் துல் சதம் விளாசினார். ரஷித் 94 ரன்கள் எடுத்தார்.