Advertisement

நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!

அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் உங்களால் சரியான லெவனை தேர்வு செய்ய முடியாது என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan April 13, 2024 • 13:29 PM
 நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்!
நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் - ரிஷப் பந்த்! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த லக்னோ அணியானது ஆயூஷ் பதோனியின் அரைசதம் மூலம் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரெசர் மெக்கூர்க் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் அறிமுக வீரராக களமிறங்கிய ஜேக் ஃபிரெசர் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் டெல்லி அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டிடதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Trending


இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி குறித்து பேசிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த், “இப்போது சற்று நிம்மதியாக உள்ளது. ஏனெனில் இந்த வெற்றியானது சில மோசமான தோல்விகளுக்கு பிறகு கிடைக்கிறது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற்றது சிறிய நிம்மதி அளிக்கிறது. இப்போட்டிக்கு முன்னதாக நாங்கள் அணியில் உள்ள இளம் வீரர்களுடன் கலந்தாலோசித்தோம்.

மேலும் எங்கள் அணியின் பந்துவீச்சில் குல்தீப் மற்றும் முகேஷ் ஆகியோர் கிடைத்தது சாதகமாக அமைந்தது. அதேசமயம் நாங்கள் இப்போட்டியில் குழுவாக செயல்பட்டோம். அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்யும் போது ஒவ்வொரு முறையும் உங்களால் சரியான லெவனை தேர்வு செய்ய முடியாது. ஒருமுறை அது உங்களுக்கு சாதகமாகவும், ஒரு சமயம் அது மோசமான லெவனாக அமையும். என்னை பொறுத்தவரையில் நாங்கள் தற்போது சரியான லெவனில் பயணிக்கிறோம் என்று நினைக்கிறேன்.

இருப்பினும் எங்கள் அணியில் சில வீரர்கள் அடுத்தடுத்து காயத்தை சந்தித்து வருவது பின்னடைவாக இருந்தாலும், அதனைப்பற்றி நாங்கள் தொடர்ந்து ஆலோசிக்க முடியும். ஆனால் நாங்கள் இப்போட்டியில் எங்கள் அணியின் புதிய மூன்றாம் வரிசை வீரரைத் தேர்வுசெய்துள்ளோம் என்று நினைக்கிறேன். அதுகுறித்து நான் அதிக பேச விரும்பவில்லை, அவர் எங்களுடன் அடுத்தடுத்த போட்டிகளில் தொடருவார்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement