
லங்கா பிரீமியர் லீக் தொடரிம் 4ஆவது சீசன் கலைக்கட்டத் தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் கலே டைட்டன்ஸ் - தம்புலா அரா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற தம்புலா அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய கலே அணியில் தொடக்க வீரர் லசித் குரூஸ்புலே 4 ரன்கலுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஷெவோன் டேனியல் - பனுகா ராஜபக்ஷா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் டேனியல் 33 ரகளுக்கு ஆட்டமிழக்க, ராஜபக்ஷாவும் 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
அதனைத்தொடர்ந்து வந்த டிம் செய்ஃபெர்ட் 14, ஷாகிப் அல் ஹசன் 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இறுதியில் கேப்டன் தசுன் ஷனகா 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 42 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கலே டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது.