
LSG CEO Raghu Iyer Involved In Road Accident Ahead Of IPL 2022 Game; All Passengers Safe (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 42ஆவது லீக் போட்டியில் இன்று லக்னோ மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. ஏற்கனவே 5 வெற்றிகளை பெற்ற நம்பிக்கையுடன் லக்னோ அணி இன்றைய போட்டியிலும் களமிறங்கியது.
இந்நிலையில் இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை துரத்தி வருகிறது.
இதற்கிடையில் இப்போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அணி நிர்வாகத்திற்கு அதிர்ச்சி செய்தி கிடைத்தது. அதாவது புனே நகரத்தில் இருந்து தான் லக்னோ அணி மும்பைக்கு வந்திருந்தது. வீரர்கள் வந்த போதும் நிர்வாகிகள் கடைசி நேரத்தில் தான் வருகை தந்தனர். வரும் வழியில் அவர்கள் சாலை விபத்தில் சிக்கியுள்ளனர்.