
தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் அந்தந்த கிரிக்கெட் வாரியங்களுக்கான டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக டிஎன்பிஎல் நடத்தப்படுவது போல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பாக மகாராஜா கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில தினங்களாக பெங்களூரில் நடைபெற்று வந்தது.
இந்தத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் மைசூர் வாரியர்ஸ் மற்றும் ஹூப்ளி டைகர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் மனிஷ் பாண்டே தலைமையிலான ஹூப்ளி டைகர்ஸ் அணியினர் வெற்றி பெற்று மகாராஜா கோப்பையை கைப்பற்றினர்.
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஹூப்ளி டைகர்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 203 ரன்களை எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் லுவித் சிசோதியா துவக்கத்திலேயே விரைவாக ஆட்டம் இழந்த போதும் முகமது தாஹா மற்றும் கிருஷ்ணன் ஸ்ரீஜித் சிறப்பாக விளையாடி 89 ரன்கள் சேர்த்தனர்.