
இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா, கடந்த 2 வருடங்களாக ஒரு சதத்தை கூட அடிக்காமல் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதிக பந்துகளை சந்தித்துவிட்டு, சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்கிறார் என பல முறை ரசிகர்கள் இவரை கடுமையாக சாடியுள்ளனர்.
இந்த விமர்சனங்களுக்கு நேற்றைய போட்டியில் புஜாரா பதிலடி கொடுத்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர்களான கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி குறைந்த ஸ்கோருக்குள் சுருண்டுவிடும் என ரசிகர்கள் கவலையடைந்தனர். அப்போது அதிரடி காட்டி அசத்தினார்.
வழக்கமாக மட்டைப்போடும் புஜாரா, நேற்று திடீரென அதிரடி காட்டினார். 86 பந்துகளை சந்தித்த அவர் 10 பவுண்டரிகளுடன் 53 ரன்களை அடித்து அசத்தினார். அவருக்கு உறுதுணையாக நின்ற மற்றொரு சீனியர் வீரர் அஜிங்கியா ரஹானே 58 ரன்களை குவித்தார். இதனால் தான் இந்திய அணி 266 ரன்களை சேர்த்தது.