
Match Hangs In Balance: India Take 58-Run Lead, South Africa Pick 2 Wickets (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா - இந்தியா இடையே ஜோஹன்னஸ்பர்க்கில் கடந்த 3ஆம் தேதி தொடங்கி நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து முதல் நாள் ஆட்டத்தின் கடைசி செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எய்டன் மார்க்ரமை 7 ரன்னுக்கு வெளியேற்றினார் ஷமி. அதன்பின்னர் கேப்டனும் தொடக்க வீரருமான டீன் எல்கருடன் ஜோடி சேர்ந்த பீட்டர்சன் சிறப்பாக பேட்டிங் ஆடினார். எல்கரும் பீட்டர்சனும் களத்தில் இருந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிந்தது.
2ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த அவர்கள் இருவரும், பும்ரா, ஷமி ஆகிய பவுலர்களின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு கவனமாக ஆடினர். அதனால் எல்கர் - பீட்டர்சன் ஜோடியை பிரிப்பது சவாலான காரியமாக இருந்தது.