
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இன்று தனது முக்கியமான ஆட்டத்தில் கொல்கத்தா அணியைச் சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் ஏறக்குறைய ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். தொடக்கத்தில் 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் அணி அடுத்தடுத்து 5 வெற்றிகளைப்பெற்றது. பின்னர் வரிசையாக 5 தோல்விகளைச் சந்தித்து வருகிறது.
இதற்கான காரணம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், இணையதளம் ஒன்றுக்குப்பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் “ இப்போது சன்ரைசர்ஸ் அணி வலிமையான அணி என்று நான் நினைக்கவில்லை. ஒருநேரத்தில் வேகப்பந்துவீச்சில் வலிமையாக இருந்தது. ஆனால் ஜான்ஸனை நீக்கியது, அதன்பின் கார்த்திக் தியாகியை நீக்கியது. சில பந்துவீச்சாளர்களையும் நீக்கியபின்அந்த அணியால் எப்படி வலிமையாக இருக்க முடியும். அதே வலிமையான அணி இப்போது இல்லை.
முதல் இருபோட்டிகளில் தோல்வி அடைந்து அதன்பின் தொடர்ந்து 5 வெற்றிகளை சன்ரைசர்ஸ் அணி பெற்றது. நடராஜன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், ஜான்ஸன் ஆகியோர் அணியில் இருந்ததால் வெற்றி சாத்தியமானது, 4 பந்துவீச்சாளர்களும் சேர்ந்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். ஆனால், இப்போது இந்த 4 பந்துவீச்சாளர்களும் ஒன்றாக ஆடுவதில்லை என்றபோது வெற்றி எவ்வாறு சாத்தியமாகும்