மீண்டும் தந்தையாகும் எம் எஸ் தோனி? - ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் தோனிக்கு விரைவில் 2ஆவது குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் தோனி. தற்போது 40 வயதாகும் தோனி கடந்த 2010ஆம் ஆண்டு சாக்ஷி சிங் ராவத்தை திருமணம் செய்து கொண்டார்.
எம்எஸ் தோனி - சாக்ஷி தம்பதிக்கு கடந்த 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஸிவா எனப் பெயர் சூட்டியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை எம் எஸ் தோனி, அவரது மனைவி சாக்ஷி, மகள் ஸிவா, சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா மற்றும் குழந்தைகள் கொண்டாடினர்.
இந்த நிலையில் தோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளார். விரைவில் ஸிவாவுக்கு சகோதரி அல்லது சகோதரன் வரப்போகிறான் என்ற செய்தியை பிரியங்கா ரெய்னா உறுதிப்படுத்தியதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியாகின.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதனையடுத்து இச்செய்தியானது தற்போது காட்டுத்தீ போன்று இணையத்தில் பரவி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now