Advertisement
Advertisement
Advertisement

தோனி அடுத்த சீசனிலும் கண்டிப்பாக விளையாடுவார் - மேத்யூ ஹைடன்!

தோனி போன்ற ஒருவரைத் தலைவராகக் கொண்டிருப்பது அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிலைத்தன்மையை கொண்டுவரும் என்று மேத்யூ ஹைடன் கூறினார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 13, 2022 • 16:05 PM
MS Dhoni Can Continue Playing IPL, He Is Certainly Turning Up For CSK: Matthew Hayden
MS Dhoni Can Continue Playing IPL, He Is Certainly Turning Up For CSK: Matthew Hayden (Image Source: Google)
Advertisement

மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பின்னர், ஐபிஎல் 2022 இல் பிளேஆஃப்களுக்கான பந்தயத்திலிருந்து சிஎஸ்கே வெளியேற்றப்பட்ட பிறகு சிஎஸ்கே முன்னாள் வீரர் மேத்யூ ஹேடனின் கருத்துக்கள் வெளியாகின. 

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனி, சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல் 2022 சீசனில் சிஎஸ்கே தொடர் வெற்றிகளை பெற தவறிய போதிலும் தோனி சிறப்பான ஃபார்மில் உள்ளார். அவர் இந்த சீசனில் 30 க்கு மேல் சராசரியுடன் 199 ரன்களையும், 130 ஸ்டிரைக் ரேட்டையும் எடுத்துள்ளார்.

Trending


இந்நிலையில் தோனி போன்ற ஒருவரைத் தலைவராகக் கொண்டிருப்பது அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நிலைத்தன்மையை கொண்டுவரும் என்று மேத்யூ ஹைடன் கூறினார்.

இதுகுறித்து பேசிய அவர், “விக்கெட்டுகளுக்கு இடையே தோனி எவ்வளவு வேகமாக ஓடுகிறார்! 20 ஓவர் அளவிலான போட்டிக்குள் ஒரு சாதாரண விளையாட்டு வீரரின் வயதைத் தாண்டி ஒரு இளைஞனை போல விளையாடுகிறார். அவர் தொடர்ந்து விளையாட விரும்பினால், அவரால் முடியும், ஏனெனில் அவர் நிச்சயமாக தனது அணிக்காகத் விளையாடுவார். தலைமைக் கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமானது! தோனி போன்ற ஒருவர் தலைமையில் இருக்கிறார். அது சென்னை அணிக்கே நிலைத் தன்மையை கொண்டு வரும்.”என்று தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement