
ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்றுடன் 14ஆவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக நிறைவு பெற்றது. முக்கியமான இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி 192 ரன்கள் குவிக்க அதன் பின்னர் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 165 ரன்களை மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இந்த வெற்றியின் மூலம் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
கடந்த ஆண்டு முதல் அணியாக வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை வென்றுள்ளது ரசிகர்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற தோனி நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என்பதே ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பாக இருந்தது.