
MS Dhoni named in 15-member defence ministry panel on NCC (Image Source: Google)
இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான அமைப்பான தேசிய மாணவர் படை (என்.சி.சி) தற்போது இருக்கும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனடிப்படையில், உயர் மட்டக்குழு ஒன்றை முன்னாள் அமைச்சர் பைஜயந்த் பாண்டா தலைமையில் மத்திய பாதுகாப்பு துறை அமைத்தது.
இந்தக் குழுவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, எம்.பி. விநய் சஹஸ்ரபுத்தே , மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆகியோரை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் அமர்த்தியுள்ளது. இவர்கள் என்சிசியை மறுசீரமைப்பு செய்வதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள் எனக் கூறப்படுகிறது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021