Advertisement

யாரும் கொடுக்காத வாய்ப்பை தோனி எனக்கு தந்தார் - தீபக் சஹார் நெகிழ்ச்சி!

சிஎஸ்கேவில் எந்தவொரு வீரருக்கும் கொடுக்காத வாய்ப்பை தோனி தன்னை நம்பி கொடுத்து தனது கிரிக்கெட் வாழ்வுக்கு உதவி இருப்பதாக தீபக் சஹார் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 22, 2021 • 22:36 PM
MS Dhoni taught me how to take responsibility: Deepak Chahar
MS Dhoni taught me how to take responsibility: Deepak Chahar (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டுள்ள வருத்தத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு பிசிசிஐ இரட்டை விருந்துகளை கொடுக்க திட்டமிட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு ஒரு இந்திய அணி, இலங்கை சுற்றுப்பயணத்திற்கு ஒரு இந்திய அணி என 2 வெவ்வேறு அணிகளைக் கொண்டு அடுத்த மாதம் முழுவதும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்த முடிவு செய்துள்ளது.

இதில் இலங்கை அணிக்கெதிரான இந்திய அணியில் இந்த ஐபிஎல் சீசனில் கலக்கிய சிஎஸ்கே பவுலர் தீபக் சஹாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, ஷமி என கடும் போட்டி இருப்பதால் தீபக் சஹாருக்கு அவ்வளவாக சர்வதேச போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவருக்கான மிகப்பெரிய வாய்ப்பாக இலங்கை தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending


இந்நிலையில், எந்த ஒரு வீரரும் எனக்கு கொடுக்காத வாய்ப்பை சிஎஸ்கே கேப்டன் மகேந்திர சிங் தோனி எனக்கு கொடுத்து, எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைத்துள்ளார் என தீபக் சஹார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தீபக் சஹார்,“நான் இலங்கை தொடருக்கு தயாராக உள்ளேன். ஐபிஎல் தொடரில் நன்றாக பந்துவீசி உள்ளேன். அதே ஃபார்ம் என்னிடம் அப்படியே உள்ளது. என்னைப் பொறுத்தவரை அனுபவம், நல்ல தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுக்கும். அந்த வகையில் என்னிடம் தற்போது நல்ல அனுபவம் உள்ளது. இலங்கை அணிக்கு எதிராக நிச்சயம் சிறப்பாக செயல்படுவேன். 

என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு தோனியே காரணம். தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. அவரின் கேப்டன்சியில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவரின் வழிகாட்டுதல்கள் என்னுடைய ஆட்டம் வேறு கட்டத்திற்கு சென்றுவிட்டது. ஆட்டத்தில் எப்படி பொறுப்பை சுமந்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார்.

சிஎஸ்கே அணியில் எந்தவொரு பவுலரும் பவர் ப்ளேயில் 3 ஓவர்களை வீசியதில்லை. ஆனால் அந்த வாய்ப்பை என்னை நம்பி தோனி கொடுத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவது என்பது கடினமான வேலை. ஆனால் தோனியின் வழிகாட்டுதல்கள் முதல் ஓவர்களில் எப்படி ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நன்றாக கற்றுக் கொண்டேன்” என தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement